மதங்களை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற பிக்குகளின் செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம் என மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் .கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பினை கேள்விக்கு உட்படுத்திய ஒருசில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் ஜனநாயகத்தினை மதிக்கும் மக்களின் மனங்களில் சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தீவிலே நீதியானது அனைவருக்கும் சமமானதாக கருதப்படுகின்றதா? என்ற ஐயத்தினை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடந்த அசம்பாவிதம் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் உயரிய கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும். அதன் கௌரவத்தின் மீது பாதிப்பினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை யார் மேற்கொண்டாலும் அவர்கள் தராதரம் பார்க்கப்படாது தண்டிக்கப்படவேண்டும்.
இதற்கமைய நீதிமன்ற தீர்ப்பினை உதாசீனம் செய்து இறந்த பௌத்த துறவியின் உடலை ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்து மதங்களை நேசிக்கும் மக்களின் மனங்களை புண்படுத்திய அனைவரும் தண்டிக்கப்படுவதன் ஊடாகவே இலங்கையின் நீதித்துறையின் மீதான நம்பிக்கையினை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றோம்.
மேலும் நீதிமன்ற தீர்பினை எடுத்துரைத்து நீதியினை நிலைநாட்ட முயற்சித்த சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதுடன் அதற்கு நீதியான தீர்வு கிடைப்பதற்கு அனைத்து சக்திகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM