வவுனியா கல்மடு பிரதான வீதியில் மரக்காரம்பளை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மின்சாரசபை ஊழியரொருவர் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கல்மடு பிரதான வீதி மரக்காரம்பளை பகுதியில் நீர்வழங்கள் வடிகால் சபையினரால் வீதியோரங்களில் பாரிய குழிகள் வெட்டி நீர்க்குழாய் பொருத்தும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது. குறித்த குழிகள் வெட்டிய மண் வீதியில் குவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக வீதியின் அரைவாசி பகுதியே சுமார் மூன்று வாரங்களாக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த வீதியில் இன்று தமது அன்றாட வேலை நிமிர்த்தம் மோட்டார் வண்டியில் பயணித்த இலங்கை மின்சாரசபையின் ஊழியரொருவர் பட்டா ரக வாகனத்துடன் மோதி வீதி அருகே நீர்வழங்கள் வடிகால் சபையினால் வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து குறித்த குழியில் சீமேந்தினால் கட்டப்பட்ட கட்டில் தலை அடிபட்டு இரத்தக் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளானவர் எகல்யகொட பகுதியைச் சேர்ந்த மலித் (வயது 24) என்ற இளைஞரென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியில் நீர்வழங்கள் வடிகால் சபையினரால் நீர்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்படும் குழிகள் நீண்ட நாட்கள் மூடப்படாமல் வீதியில் மண்குவிக்கப்பட்டுள்ளமையால் வீதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் விபத்துக்குள்ளாவதாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM