ஊவா மாகாணத்தில் “புர்கா” தடையை தொடர்ந்தும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக ஊவா மாகாண ஆளுனர் மைத்திரி குனரட்ன தெரிவித்தார்.
இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“புர்கா” உடையை ஊவா மாகாணத்தில் தடைசெய்வதன் ஊடாக நான் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவன் அல்ல. மாகாணத்தின் பாதுகாப்பினை முன்னிலைப்படுத்திய வகையிலேயே “புர்கா” தடையை மேற்கொண்டிருக்கின்றேன். கடந்த காலத்தில் சங்கைக்குரிய ஞானசார தேரரின் முஸ்லீம்களுக்கெதிரான செயற்பாடொன்றிலும் நான் தேரரை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.
என்னிடம் இத்தகைய இன, மத, கட்சிப் பேதங்களும் கிடையாது. தேசிய பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையிலேயே, இச் செயற்பாட்டினை, ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளும்படி மாகாண பிரதி பொலிஸ் அதிபரைக் கேட்டுள்ளேன். இப் “புர்கா” உடையைப் பயன்படுத்தி, அடிப்படைவாதிகள் எவராயினும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விடலாம்.
இதன் மூலம் அனைத்து முஸ்லீம்களையும் குற்றஞ் சுமத்திவிட முடியாது. இந்நாட்டு முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சகவாழ்வினை ஜீரணிக்க முடியாத சிலர் தப்பான செயற்பாடுகளில் இறங்கி விடலாம். இதனைத் தடுத்து, முன்மாதிரி மாகாணமாக, ஊவா மாகாணத்தை மாற்றியமைக்கவே, எனது செயற்பாடுகள் அமைகின்றன.
ஊவா மாகாணத்தில் இவ்வகையில் “புர்கா” அணிந்து செல்வார்களாயின், அவர்களை விசாரணைக்குற்படுத்த வேண்டியது பொலிசாரின் கடமையாகும். எனது இச் செயற்பாடுகள் முஸ்லீம் மக்களை அசௌகரியப்படுத்துமானால் அது குறித்து கவலையடைகின்றேன்.
நாட்டின் அண்மையில் ஏற்பட்ட முஸ்லீம் அடிப்படைவாதிகளின் பிரச்சினையினையடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டு “புர்கா” அணிய தடை பிறப்பிக்கப்பட்டது. அச்சட்டம் தற்போதைய நிலையில் நீக்கப்பட்டதுடன், “புர்கா” தடையும் நீக்கப்பட்டதென்று அறிவிப்பு விடுத்தாலும் ஊவா மாகாணத்தில் அத்தடையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவேன்” என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM