2 ஆவது நாளாகவும் தொடரும் மன்னார் சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு 

Published By: Digital Desk 4

25 Sep, 2019 | 01:36 PM
image

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று  புதன்கிழமை 2 ஆவது நாளாகவும்; அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

குறித்த தடை உத்தரவை மீறி   ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் கடந்த திங்கட்கிழமை (23) தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது பொது மக்கள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவங்களை கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை (25) 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்து தமது வாயை கருப்பு பட்டியினால் கட்டி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு,தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் கட்டளையை உதாசீனம் செய்த ஞானசார தேரர் உற்பட சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களையும், கட்டளையை அமுல் படுத்த தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள கூறி குறித்த பகிஸ்கரிப்பு இடம் பெற்றது.

குறித்த பணிப்பகிஸ்கரிப்பு எதிர் வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என மன்னார் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளர்.

 இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து திரும்பிச் சென்றுள்ளதோடு,இன்றைய தினம் இடம் பெற இருந்த வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15