இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமீத்சா இந்தியாவி;ன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரை பாக்கிஸ்தானை தளமாக கொண்ட ஜய்ஸ்- ஈ - முகமட் அமைப்பு இலக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவத்து அதிகார சபைக்கு இது தொடர்பான கடிதமொன்று கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்முகாஸ்மீருக்கான விசேட அந்தஸ்த்தினை நீக்கியமை தொடர்பிலேயே இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட கடிதத்தில் பாக்கிஸ்தானை தளமாக கொண்ட அமைப்பு 30 நகரங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் நான்கு விமானநிலையங்களை தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய்ஸ்- ஈ- முகமட் அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமீத்சா இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜி;த் டோவல் ஆகியோரை இலக்குவைப்பதற்காக பயங்கரவாதிகள் குழுவொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட கடிதம் மூலம் தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமரின் தொகுதியான வரணாசியில் தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் இடம்பெறுகின்றன,எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பாக்கிஸ்தானை சேர்ந்த ஜெய்சீ-முகமட்- அமைப்பின் உறுப்பினருக்கும் அவரது நடவடிக்கைகளிற்கு துணைபோகின்ற ஒருவரிற்கும் இடையே இடம்பெற்ற தொடர்பாடல்களை இடைமறித்து கேட்ட வெளிநாட்டு புலனாய்வு அமைப்பே இந்த தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட கடிதத்தை தொடர்ந்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM