வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24) இடம்பெற்றது.
இந்த சந்திப்பி;ன் போது டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் ஆளுநர் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.
அத்துடன் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகள் சுற்றறிக்கைகளுக்கமைவாக செயற்படவேண்டும் என்பதுடன் வடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது நன்கொடைகள் வழங்குமாறு கேட்கப்படின் அவை தொடர்பான தகவல்களை ஆளுநர் செயலகத்திற்கு அறியத்தருமாறும், ஆளுநர் செயலகத்தினூடாக குறித்த தகவல்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் மாகாண கல்விப்பணிப்பாளர் வலய கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கூடிய அக்கறையுடன் செயற்படவேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM