தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

24 Sep, 2019 | 06:58 PM
image

யாழ்ப்பாணம்  குருநகர் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டி நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகர் பேங்க் சால் வீதியைச் சேர்ந்த ஜோசப் மேரி ஜோசப்பினா (வயது 61) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி எந்தவித துணையுமின்றி தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்த பொழுது மூதாட்டியை பார்க்கச் சென்ற உறவினர்கள் அவர் மூச்சடங்கிக் காணப்பட்டதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

எனினும் மூதாட்டி இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இறப்புத் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55