(நா.தினுஷா)
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அதிகரித்துள்ள போதிலும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதை தொடர்ச்சியாக காலந்தாழ்த்துவது பிரச்சினையை அதிகரிக்கும்.
ஆகவே இதற்கு முன்னர் கூறியது போன்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்ற குழுவையும் ஒன்றாக அழைத்து வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். தேவை ஏற்படின் வாக்கெடுப்பு நடத்தவும் முடியும். அதுவே ஜனநாயக முறையாக இருக்கும் என்று அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இன்று அல்லது நாளை வேட்பாளர் விவகாரத்துக்கு இறுதி முடிவு கிடைக்கும். முடிவு கிடைத்தவுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னணியும் சின்னமும் அறிவிக்கப்படும்.
தேர்தலை வெற்றிக்கொள்வதே எங்களின் பிரதான குறிகோளாகும். அதற்கு அப்பால் நாங்கள் வேறு எந்த கோரிக்கையையும் முன்வைக்க போவதில்லை. கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM