கொழும்பு - பெலியத்தவுக்கிடையில் அதிசொகுசு ரயில் சேவை

Published By: Digital Desk 3

24 Sep, 2019 | 01:21 PM
image

கொழும்பு - மருதானையிலிருந்து பெலியத்தவுக்கிடையில் இன்று (24.09.2019) முதல் புதிய அதிசொகுசு கடுகதி ரயில்  சேவையில் ஈடுபடவுள்ளது.

நாளாந்தம் பிற்பகல் 3 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படவுள்ள குறித்த ரயில், மாலை  6.05 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

மீண்டும் பெலியத்தயிலிருந்து அதிகாலை 2.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள குறித்த ரயில், காலை 5.10 மணிக்கு மருதானையை வந்தடையவுள்ளது.

கொழும்பு, கோட்டை, அளுத்கம, அம்பலங்கொட, ஹிக்கடுவ, காலி, வெலிகம, மாத்தறை மற்றும் பெலியத்த ரயில் நிலையங்களில் மாத்திரமே குறித்த ரயில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்