யுத்தவெற்றியின் ஏழாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு உயிர்நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்ல பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட முப்படை பிரதானிகள் நிகா்வில் கலந்துகொள்கின்றனர்.
இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக நிலவிய உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில் 7வது ஆண்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 4 மணிக்கு பத்தரமுல்லையில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி அமைந்துள்ள பிரதேசத்தில் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்வு எளிமையான வகையிலும் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ரீதியிலும் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன , பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகள் நிகழ்வில் கலந்துகொள்வர்.
மேலும் இறுதி யுத்தத்தை தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு கலை நிகழ்வுகள், முப்படைகளினதும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளினதும் அணிவகுப்புகள், மத நிகழ்வுகள் என்பன சுதந்திர சதுக்கதில் இடம்பெறவுள்ளன.
கடந்த காலங்களில் இராணுவ வெற்றி தினமாக கொண்டாடி வந்தபோதிலும் இம்முறை வெற்றி தினமாக கொண்டாடபடாது விடுதலை தினமாக கருதியும் யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்கள், பொதுமக்களை நினைவேந்தியும் அனுஷ்டிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் போலன்றி இப்போது நாட்டில் நில்லிணக்கம், சகவாழ்வு பற்றிய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் சகல மக்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கபடும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM