சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டைகளை டுபாயிக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிலாபம்- மாரவில பகுதியை சேர்ந்த 36 வயதான வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று காலை டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றபோது அவரது பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பொதியை சோதனை செய்தபோது 22 கிலோ கிராம் நிறைகொண்ட சுமார் 36 இலட்சத்து 69 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ள இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM