(செ.தேன்மொழி)
ஹிக்கடுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ - பின்கந்த பகுதியில் இன்று காலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து குழல் 12 ரக உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும் , 4 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை நாளை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM