(செ.தேன்மொழி)
கட்டுவன பகுதியில் மாடொன்றை திருடிய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கட்டுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை மாடொன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கட்டுவன - ஹொரேவெல சந்திக்கருகில் இரவு 9 மணியளவில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன்போது குறித்த வீதியில் சென்ற கார் ஒன்றை நிறுத்துவதற்காக பொலிஸார் சமிஞ்சை காட்டியும் இந்த கார் நிறுத்தாமல் சென்றதை அடுத்து பொலிஸார் காரின் மீது துப்பாக்கியால் சூட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த காரில் வந்துக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
மீ எல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் குறித்த மாட்டை மாத்தறைக்கு எடுத்துச் சென்று விற்பணை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்களுடன் மாத்தறைக்கு சென்று திருடப்பட்ட மாட்டை மீட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM