தனது காதலியிடம் அவரை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நீரின் கீழ் நீச்சலடித்தவாறு விநோதமான முறையில் தெரிவிக்க முயன்ற காதலர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் தான்சானியாவில் இடம்பெற்றுள்ளது. தான்சானியாவின் பெம்பா தீவுக்கு அப்பாலுள்ள மன்டா வாசஸ்தலத்திற்கு விடுமுறையைக் கழிக்க தனது காதலியான கெனேஸா அன்டோயினியுடன் சென்ற அமெரிக்கரான ஸ்டீபன் வெப்பரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன.
மேற்படி விடுமுறை வாசஸ்தலத்திற்கு தனது காதலியுடன் வந்த ஸ்டீவன் அந்த வாசஸ்தலத்திலிருந்த கடல் நீருக்கு கீழான கண்ணாடி அறையை நான்கு இரவுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.
கடற்கரையிலிருந்து சுமார் 820 அடி தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 32 அடி ஆழத்தில் அமைந்த அந்த காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்ட கண்ணாடி அறையில் தங்கியவாறு கடலின் உட்புற அழகையும் மீன் கூட்டங்களையும் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை விநோதமான முறையில் வெளியிட முயன்ற ஸ்டீவன் கடலில் குதித்து நீருக்கு கீழான அறையின் கண்ணாடிப் பகுதி மீது தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை உள்ளடக்கிய கடிதத்தை அழுத்திப் பிடித்து அதிலுள்ள வாசகங்களை வாசிக்க காதலியை பணித்த பின்னர் திருமண மோதிரத்தை காண்பித்துள்ளார்.
இதன்போதே அவர் காதலியின் முன்பாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஸ்டீவன் தனது திருமண விருப்பத்தை வெளியிட எழுதிய கடிதத்தில், "நான் உன்னிடம் கொண்டுள்ள காதல் தொடர்பில் அனைத்தையும் சொல்லுமளவிற்கு என்னால் எனது மூச்சை பிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நான் உன்னை நேசிக்கிறேன். நான் ஒவ்வொரு நாளும் உன்னை மேலும் மேலும் நேசிக்கிறேன்" என எழுதியிருந்தார்.
தனது காதலர் நீரின் கீழிருந்தவாறு திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிடும் காணொளிக் காட்சியை பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள காதலியான கெனேஸா, தான் தனது காதலருக்கு "ஆம்.. ஆம்,.." என மில்லியன்கணக்கான தடவைகள் தனது சம்மதத்தை வெளியிட தயாராகவுள்ள போதும் அதனைச் செவி மடுக்க அவர் உயிருடன் இல்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM