வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த ஒருவர் கைது

Published By: Digital Desk 4

22 Sep, 2019 | 05:28 PM
image

சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்த குற்றச்சாட்டில் கீரிமலைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், அங்கு கஞ்சா போதைப்பொருளை வாங்குவதற்கு வந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கீரிமலை பகுதியில் உள்ள வீடு  சிவில் உடை தரித்த பொலிஸாரினால் இன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீட்டுத் தோட்டத்துக்குள் மறைவாக வளர்த்த மூன்று கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் வீட்டில் கஞ்சாவினை கொள்வனவு செய்ய வந்திருந்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து எட்டு கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59