அமெரிக்க குடியுரிமை இரத்து செய்தமைக்கான ஆவணங்களை கோத்தாபயவினால்  பகிரங்கப்படுத்த முடியுமா? -அஜித் பி பெரேரா 

Published By: Digital Desk 4

22 Sep, 2019 | 05:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமெரிக்க  குடியுரிமையினை இரத்து செய்து விட்டதாக இதுவரையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரிய ஆவணங்களை பகிரங்கப்படுத்தவில்லை. வேட்புமுனு தாக்கல் செய்ய முன் ஆவணங்களை வெளிப்படுத்த முடியுமா. 

நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யமாட்டார்கள் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின்  இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் மீது பற்று உள்ளமையினாலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எதிர்  தரப்பினர் கடந்த காலங்களில் அத்தரப்பின் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றியையும்,இறையாண்மைக்கு வழங்கிய றிலையினையும் அரசியலை விடுத்து தனித்து ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க பிரஜாவுரிமையினை தான் இரத்து செய்து விட்டதாக வெறும் பேச்சளவில் மாத்திரமே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். உரிய ஆவணங்கள் ஏதும் இதுவரையில்   உரிய இடத்திற்கும், நாட்டு மக்களுக்கும்  பகிரங்கப்படுத்தப்படவில்லை.

 இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் அரசியலில்  செல்வாக்கு செலுத்த முடியாது என்பது  சர்வதேச  அரசியலிலும் பின்பற்றப்படும் ஒரு  செயற்பாடாகும். இரு நாடடையும் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் செயற்படுவது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எமது நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எவரும் .அமெரிக்க பிரஜையினை நாட்டின் ஜனாதிபதியாக்க மாட்டார்கள். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19