பட்டக்கண்ணு நிதியத்தின் மூலம் அமரர் சுப்பையா ஆச்சாரி தியாக ராஜாவினால் அட்டன், மல்லியப்புவில் அமைந்துள்ள மலையகத்தின் முதலாவது விழிப்புலனற்றோர் பாடசாலையான நேத்ராவில் கல்வி பயிலும் நோர்வூட் போற்றி தோட்டத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவன் விஜயபாண்டியன் ஜெயகாந்தன் கீ போட் வாத்திய கருவி வாசிப்பில் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட்டு தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இலங்கை இசை, நடனம் மற்றும் பேச்சு போட்டிகளை நடத்தும் அமைப்பினால் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறுதிச்சுற்றில் வென்ற இவர் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகினார். கடந்த 17 ஆம் திகதியன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியாக வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியமைக்கான சிறப்பு விருதினையும் பெற்றார். மலையகத்திலிருந்து முதன் முறையாக விழிப்புலனற்ற ஒரு தமிழ் மாணவன் கீ போட் வாத்தியக்கருவி இசைக்கும் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வெற்றி பெற்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM