வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (22) காலை 9.00மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருமன்காட்டு சந்தியில் பாதையின் மறுபக்கம் செல்ல முற்பட்ட நபரை மன்னார் வீதியுடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பாதையினை கடக்க முற்பட்ட 40 வயது மதிக்கத்தக்க திருநாவற்குளத்தினை சேர்ந்த சிதம்பரம் செல்லத்துரை என்ற நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 50மீற்றர் தொலைவில் பாதசாரிகள் கடவை இருந்தும் பாதையினை கடக்க முற்பட்ட நபர் பாதசாரிகள் கடவையினை பயன்படுத்தாது வீதியினுடாக அவதானமின்றி கடக்க முற்பட்ட சமயத்திலிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM