பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published By: Daya

21 Sep, 2019 | 11:01 AM
image

வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமை யால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நேற்று ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாகத் தெரியவருகையில், நபர் ஒருவர் தன்னை தாக்கியதாகத் தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வவுனியா தெற்கு தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த கபில்ராஜ் என்ற 23 வயதுடைய இளைஞரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்கியதாகப் கூறப்பட்ட  முறைப்பாடு பொய் எனக் கூறியும், கைது செய்யபட்ட இளைஞரை விடுவிக்கக்கோரியும் புதிய கற்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த எண்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

இதேவேளை இளைஞரைத் தாக்கிய பிரதேச சபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்கச் சென்ற இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தாக்கியதாகத் தெரிவித்து பிறிதொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியைக் கைது செய்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் இரவு 11.30 மணியளவில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.

முறைப்பாடளித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கபில்ராஜ் என்பவரின் மனைவி ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37