யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் நீக்கம் ; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சபைக்கு அறிவுக்குமாறு வலியுறுத்தல்

Published By: Vishnu

21 Sep, 2019 | 08:20 AM
image

(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் நுண்கலைக்கழக உபவேந்தர் எந்த விசாரணையும் இன்றி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபைக்கு அறிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நேற்றைய தினமும் யாழ். நுண்கலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இன்றும் எந்தவித முறையான விசாரணையும் இன்றி திடீரென ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு  நீக்குவதற்கு முறைமையொன்று இல்லாமல் நாட்டில் இருக்கும் பிரதான பல்கலைக்கழகத்தின் உபவேந்ததர்களை நீக்குவது பாரிய பிரச்சினையாகும்.

அத்துடன் நாட்டில் இன்னும் சில மாதங்களில் பிரதான தேர்தல் ஒன்று இடம்பெற திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு உபவேந்தர்களை நீக்கி இருப்பது பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுகின்றது. அதனால் இதுதொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54