(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் நுண்கலைக்கழக உபவேந்தர் எந்த விசாரணையும் இன்றி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபைக்கு அறிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நேற்றைய தினமும் யாழ். நுண்கலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இன்றும் எந்தவித முறையான விசாரணையும் இன்றி திடீரென ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நீக்குவதற்கு முறைமையொன்று இல்லாமல் நாட்டில் இருக்கும் பிரதான பல்கலைக்கழகத்தின் உபவேந்ததர்களை நீக்குவது பாரிய பிரச்சினையாகும்.
அத்துடன் நாட்டில் இன்னும் சில மாதங்களில் பிரதான தேர்தல் ஒன்று இடம்பெற திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு உபவேந்தர்களை நீக்கி இருப்பது பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுகின்றது. அதனால் இதுதொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM