(எம்.மனோசித்ரா)
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்ற அதிகாரத்தை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தத்தை விஷேட அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தமையானது மோசமான விடயமென்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாரும் கலவரமடையத் தேவையில்லை. ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எமக்கு வெற்றிக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தினமும் வேட்புமனு தாக்குதலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சிக்கின்றமையை மிகவும் மோசமான செயலாகவே நான் கருதுகின்றேன். இவ்வாறான செயற்பாடு மக்களின் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறியாக்குகின்றது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிச்சயமாக நீக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே நீக்கியிருக்கலாம். அல்லது செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலாவது இது பற்றி கலந்துரையாடியிருக்கலாம். அன்று தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டவுடன் எவ்வாறு இது போன்று சிந்திக்கிறார்கள் என்று விளங்கவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM