அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்கையில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
டெக்ஸாஸ் மாகாணம், கிங்ஸ்வில் நகரில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான விமான நிலையத்தின் நுழைவுத் தடுப்பை உடைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை நுழைந்த வாகனமொன்று, இறுதியாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அந்த வாகனத்தில் பயணித்த 15 பேரில் 6 பேர் காயமடைந்தனர்.
அந்த 15 பேரும் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், எல்லைக் காவல் பொலிஸார் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், அந்த வாகனத்தை தாங்கள் துரத்திச் செல்லவில்லை என்று எல்லைக்காவல் பொலிஸ் ஊடக பேச்சாளர் ரோட் கைஸ் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரில் மூவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு இதே விமான நிலையத்தில் எல்லைக் காவல் பொலிஸ் துரத்தி வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM