ஆப்கானிஸ்தானின் படையினரும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் மறைவிடங்களை இலக்குவைத்து புதன்கிழமை இரவு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் எனினும் தற்செயலாக இவை பைன் தோட்டமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோட்டமொன்றில் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாக 30ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் அமைப்பினரை இலக்குவைத்து ஆப்கான் மற்றும் அமெரிக்க படையினரின் தாக்குதல் இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் உயிரிழப்புகள் குறித்த விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை.
நங்ஹர்கர் மாகாண அரசாங்கத்தின் அதிகாரியொருவர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதுடன் ஒன்பது உடல்களை இதுவரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தோட்டத்தில் தொழில்புரிந்தவர்கள் கூடாரமொன்றில் அமர்ந்திருந்தவேளை ஆளில்லாவிமானதாக்குதல் இடம்பெற்றது என பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தீயை மூட்டிவிட்டு அமர்ந்திருந்தவேளை ஆளில்லா விமானங்கள் அவர்களை இலக்குவைத்தன என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM