நியுயோர்க்கில் மாணவன் கத்தியால் குத்தப்படுவதை தடுக்காமல் சக மாணவர்கள் அதனை தங்கள் மொபைல்போன்களில் படம் பிடித்துக்கொண்டிருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நியுயோக்கின் நஸ்ஸாவ் பகுதியில் உள்ள ஓசன்சைட் உயர்தர பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கசீன் மொறிஸ் என்ற 16 வயது மாணவன் மோதலின் போது தாக்கப்பட்டதுடன் கத்தியால் குத்தப்பட்டுள்ளான்,எனினும் சக மாணவர்கள் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்துள்ளனர்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் காயங்கள் காரணமாக உயிரிழந்தான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் மாணவியொருவர் தொடர்பிலேயே இடம்பெற்றது குறிப்பிட்ட மாணவியுடன் டேட்டிங் செல்வது தொடர்பாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டி தீவிரமடைந்து ஆறு பேர் மொறிஸ் மீதும் அவரது நண்பர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனா பின்னர் கத்திக்குத்தும் இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 50ற்கும் அதிகமான மாணவர்கள் காணப்பட்டனர் அவர்கள் வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளனர் எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மொறிசை காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை என்ன செய்வது என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரி மாணவர்கள் காசீன் மொறிசிற்கு உதவாமல் வேடிக்கை பார்த்தனர்,அவர்கள் அதனை வீடியோவில் பதிவு செய்தனர் மொறிசின் மரணத்தை தடுக்காமல் வீடியோவில் அதனை பதிவு செய்துள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது சகோதரனின் மரணம் குறித்து அஞ்சலி நிகழ்வில் கருத்து வெளியிட்டுள்ள மொறிசின் சகோதரி கெயன்னா மொறிஸ் தனது சகோதரின் மார்பிலிருந்து குருதிபெருக்கெடுத்துக்கொண்டிருந்த வேளை சிலர் உதவ முன்வராமல் வீடியோவில் படமெடுத்துக்கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.
எனது சகோதரன் யாருக்கும் உதவுவதற்கு முதலில் முன்வரக்கூடியவர் ஆனால் அவரது மரணத்தை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM