(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் வர்த்தக அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள 5 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள மீளாய்வு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே, மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜோன்ஸ்டனின் குறித்த மீளாய்வு மனுவை விசாரணைக்கு உட்படுத்தி இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் வகையிலேயே இந்த தற்காலிக தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில், சதொச ஊழியர்கள் 153 பேரை அவர்களது உத்தியோகபூர்வ பணியில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அரசுக்கு 4 கோடிக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ள விதம் சட்ட விரோதமானது எனக் கூறி தனது சட்டத்தரணிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அடிப்படை ஆட்சேபங்களை முன்வைத்தபோதும் அதனை நிராகரித்து, அவ்வழக்குகளை விசாரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக வும், எனவே நீதிவான் நீதிமன்றின் குறித்த தீர்மானத்தை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறும் தன்னை நிரபராதி என அறிவித்து விடுவிக்குமாறும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேல் நீதிமன்ற மீளாய்வு மனுவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM