தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்­று­கி­றது - அங்கஜன் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

19 Sep, 2019 | 10:26 AM
image

(எம்.மனோ­சித்ரா)

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கு­வ­தற்கு தான் முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் அதனை வழங்க விடாமல் தடுப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சிலரால் சதித்­திட்டம் தீட்­டப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். எனினும் இது வரையில் இருந்த ஆட்­சி­யா­ளர்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­களின் பெரும்­பா­லான கோரிக்­கை­களை நிறை­வேற்­றி­யுள்ளார் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரி­விக்­கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வடக்கு மற்றும் கிழக்கில் முப்­ப­டை­யினர் வச­மி­ருந்த 21, 073 ஏக்கர் அரச காணி­களும், 19, 889 தனியார் காணி­களும் விடு­விக்­கப்­பட்­டன. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவ்­வ­ருடம் வரையில் 42, 207 அரச காணி­களும், 5958 ஏக்கர் தனியார் காணி­களும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது 551 ஏக்கர் அரச காணி­களும், 324 ஏக்கர் தனியார் காணிகள் மாத்­தி­ரமே விடு­விப்­ப­தற்கு எஞ்­சி­யுள்­ளன.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து கொண்டு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இன்­னமும் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

எனவே இவ்­வாறு தொடர்ந்தும் ஏமா­றாமல் தமக்கு உரிய தீர்வை வழங்கக் கூடிய, வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றக் கூடிய ஒரு­வரை அடுத்த ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. அதனை அவர் கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43