(எம்.மனோசித்ரா)
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவதற்கு தான் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதனை வழங்க விடாமல் தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் சிலரால் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் இது வரையில் இருந்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினர் வசமிருந்த 21, 073 ஏக்கர் அரச காணிகளும், 19, 889 தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் வரையில் 42, 207 அரச காணிகளும், 5958 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 551 ஏக்கர் அரச காணிகளும், 324 ஏக்கர் தனியார் காணிகள் மாத்திரமே விடுவிப்பதற்கு எஞ்சியுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
எனவே இவ்வாறு தொடர்ந்தும் ஏமாறாமல் தமக்கு உரிய தீர்வை வழங்கக் கூடிய, வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒருவரை அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. அதனை அவர் கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM