இலங்கையின் முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் இலங்கை கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயார் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயார்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பதவிநிலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை உள்ளன.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு முன்னாள் படைத் தளபதிக ளுக்கும் உயர் பதவிநிலைகளை வழங்குவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM