(ஆர்.யசி,எம்.ஆர்.எம் வசீம் )
இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையில் ஊழல் குறித்த கோப் குழுவின் விசாரணைகளுக்கு வருகை தராமை குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் கோப் தலைமையிடம் மன்னிப்பை கோரினர்.
கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக வரும் படி இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைக்கு பணிப்பு விடுத்தும் அதன் தலைவர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் வருகை தரவில்லை.
இந்நிலையில் இன்று ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் சம்மி சில்வா, பொருளாளர் லலித் ரம்புக்வெல, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் கோப் குழுவில் விசாரணைகளுக்காக கலந்துகொண்டனர்.
கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி கோப் குழுவிற்கு இவர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்களின் தனிப்பட்ட காரணிகளுக்காக வருகை தராத நிலையில் இன்று அது குறித்து குழுவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஆசிய கிரிக்கெட் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதால் தமால் வருகை தர முடியாது போய்விட்டதாக தலைவர் சம்மி சில்வா தெளிவுபடுத்தினார். பொருளாளர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரம்முடியவில்லை எனவும், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தான் தான் இலங்கை -நியுசிலாந்து போட்டி கண்காணிப்புக்கக்க சென்றதாகவும், லலித் ரம்புக்வெல்லவிற்கு சுகவீனம் ஏற்பட்டதாகவும் தாம் வருகை தராததற்கான காரணிகளை முன்வைத்தனர்.
எனினும் தங்களின் உரிக்க காரணிகளை எழுத்து மூலமாக சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் நீங்கள் மன்னிப்புக் கேட்பதால் விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது வேறு ஒரு நாளில் விசாரணைகளுக்கு வரவேண்டும் எனவும் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM