மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும் வீரகேசரியும் இணைந்து ஏற்பாடு
இலங்கை அரச பொது நிர்வாக சேவைக்கென நடத்தப்படும் பரீட்சைக்கு மலையகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான விசேட வதிவிட பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும் வீரகேசரி நிறுவனமும் கூட்டாக இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள் அட்டன் சீடா நிலையத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் அறிவித்தலுக்கேற்ப பதிவுசெய்து கொண்டுள்ள பரீட்சார்த்திகள் யாவரும் இதில் கலந்துகொள்ள முடியும். அதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மலையக இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்குவதன் மூலம் இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அரச பொது நிர்வாக சேவையில் காணப்படும் உயர் பதவிகளுக்கான வெற்றிடங்களில் இவர்களும் நியமனங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இப்பயிற்சி வகுப்புகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பயிற்சி வகுப்பின் முதலாவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்வரை இடம்பெறும். மாதத்தில் மூன்று நாட்கள் என்றவாறு அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் தங்கியிருந்து பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கான தயார் நிலையில் சீடா வள நிலையத்திற்கு 27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு முன்னர் வருகை தந்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கு கொள்பவர்களுக்கான தங்குமிடம், தேநீர், உணவு மற்றும் பயிற்சி வழங்குபவர்களுக்கான கொடுப்பனவுகள் யாவற்றையும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும் வீரகேசரி பத்திரிகை நிறுவனமும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் பங்குகொள்ளும் விண்ணப்பதாரிகளினதும் பயிற்சி வழங்கும் ஆசிரியர்களினதும் இன்னோரன்ன விடயங்களை நெறிப்படுத்துவதற்கு இணைப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பயிற்சி வகுப்பானது இத்துறையில் நல்ல அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் (0716643669), பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர்.ரமேஸ் (0768629870) ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இப்பயிற்சி வகுப்பின் முதல் நாள் ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் மற்றும் பேராசிரியர் எஸ். விஜயசந்திரன் ஆகியோருடன் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பிப்பர். மேலதிக தொடர்புகளுக்கு இப்பயிற்சி வகுப்பின் இணைப்பாளரான கஜனுடன் (0712899295) தொடர்பு கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM