விராட் கோலி தற்போது உலகின் சிறந்த மனிதராகத் திகழ்கிறார், ஸ்டீவ் ஸ்மித்தைப் பொறுத்தவரை சாதனைகளை அவரைப் பற்றி பேசும் எனக் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அடைவதற்கு உங்களுக்கு ஆசை இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
பதில் : முதலில் ரவிசாஸ்திரி தனது பயிற்சி காலத்தை நிறைவு செய்யட்டும். அதன் பிறகு நாம் அடுத்த பயிற்சியாளர் பற்றி சிந்திக்கலாம். எது எப்படியோ நான் ஏற்கனவே ஒரு பயிற்சியாளர் தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கடந்த தொடரில் பயிற்சியாளர் பணியை கவனித்தேன்.
கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், எனது பயிற்சி காலத்தில் அந்த அணி ‘பிளே-ஆப்’ சுற்று வரை முன்னேறியது.
மேலும் இந்திய மூத்த வீரர் தோனி தனது ஓய்வு குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளார். இந்த விஷயத்தில் தேர்வாளர்கள் மற்றும் தலைவர் விராட் கோலி ஆகியோர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்திய கிரிக்கெட்டில் இவர்கள் முக்கியமானவர்கள். அதனால் தோனியின் எதிர்காலம் குறித்து இவர்கள் முடிவு செய்யலாம் என்றார்.
கேள்வி : விராட் கோலி-ஸ்டீவ் ஸ்மித் ஒப்பீடு எத்தகையது?
பதில் : இத்தகைய கேள்விகள் பதிலுக்கு உகந்தவை அல்ல. இது ஆட்டத்திறன் பற்றியது. விராட் கோலி தற்போது உலகின் சிறந்த வீரராக திகழ்கிறார்.
அது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஸ்டீவன் ஸ்மித்தை பொறுத்தவரை சாதனைகளே அவரை பற்றி பேசும். இப்போதே 26 டெஸ்ட் சதங்கள் அடித்திருப்பது வியப்புக்குரியது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM