(ஆர்.விதுஷா)
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் குறித்து சர்ச்சை ஏற்படுமானால் செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விபத்துக்கள் அற்ற நாடு வேலைத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு இன்று கொழும்பு கோட்டை - தனியார் பஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
அதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது ,
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவே நியமிக்கப்படுவார்.
ஏனெனில் அவரே இது வரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கட்சித்தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரம சிங்கவிற்கு கடிதத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார். அதேவேளை,எமது கட்சியில் இதுவரையில் வேறு எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவ்வாறு வேறு எவராயினும் போட்டியிட முன்வருவார்களாயின் எதிர்வரும் வாரங்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.ஏனெனில் வேட்பனுக கோரல் இடம்பெறவுள்ளது.
ஆகவே எவராயினும் போட்டியிடவுள்ளார்கள் ஆயின் கட்சித்தலைவருக்கு தெரியப்படுத்துவர்.அவர்கள் வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். ஆயினும் இது வரையில் எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடல் தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் சஜித் பிரேம தாசவே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM