அமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட் தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு பிராசோஸ் ஆற்றுப்படுகைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
லில்லி ஆற்றில் நீச்சலடித்து விளையாடிய போது நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) எனும் அமீபாவால் தாக்கப்பட்டார். நல்ல நீரில் இருக்கும் இந்த வகை அமீபாக்கள் நேரடியாக மூளையை தாக்கக் கூடியவை.
இதையடுத்து அந்த சிறுமி போர்ட் வொர்த்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து லில்லி படித்து வந்த பாடசாலை, தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது. லில்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ள அப்பாடசாலை நிர்வாகம், 'லில்லியின் இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்துள்ளது. லில்லி ஒரு புத்திசாலி மாணவி மட்டுமல்லாமல், அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர் என்றும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லில்லியின் மரணத்திற்கு காரணமான கொடிய வகை அமீபா, மூக்கின் வழியாக நமது உடலுக்குள் நுழையக்கூடியது. மூக்கு வழியாக உள்ளே நுழைந்து, ஒருவரின் மூளை திசுக்களை தாக்கி அழிக்கும்.
அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 34 பேர் இந்த வகை அமீபா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM