இந்தோனேஷியாவின் மழைக் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயையடுத்து சுமார் 200 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காட்டுத் தீ விபத்து விவசாயத்திற்காக காடுகளை சட்டவிரோதமாக எரிப்பதனால் ஏற்படுகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக இந்தோனேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோ போன்ற பகுதிகளிலேயே கடந்த சில நாட்களாக இந்த கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு மற்றும் உடல்நலம் பாதிப்பு போன்றவை ஏற்படும் சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 இராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டன. 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டன என்றும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை காட்டுத் தீ தொடர்பாக மலேசியாவும், இந்தோனேசியாவும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM