ஹங்­வெல்­லை சம்பவம் : 2 மணி நேரத்­துக்குள் 6 பேரைக் கைது செய்து மர்மம் துலக்­கி­யது பொலிஸ்

Published By: Vishnu

17 Sep, 2019 | 10:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நேற்று முன்தினம் இரவு ஹங்­வெல்லை நகரில் எம்­புல்­கம சந்­தியில் ஒருவர்  சுட்டும் வெட்­டியும் படு கொலை  செய்­யப்­பட்­டுள்ளார். இதன்­போது குறித்த சந்­தியில் வடை வர்த்­தகம் செய்யும் அப்­பாவி இளைஞர் ஒரு­வரும் பாதாள உல­கத்­துடன் தொடர்­பு­டைய இலக்கு வைக்­கப்­பட்ட பிர­தான நபரும் படுகாய­ம­டைந்­துள்­ளனர்.

தற்­போது மூன்று கொலைகள், ஒரு கொலை முயற்சி, நவ­க­முவ பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்த சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், அங்­கு­கொ­ல­பெ­லஸ்ஸ சிறையிலுள்ள   பாதாள உலகக் குழு­வொன்­றை வழிநடத்தும் தினித் மெவன் மாபுல என்ற ஊறு­ஜுவா இந்தத் தாக்­கு­தலை வழிநடத்­தி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

அதன்­படி தாக்­கு­தலை நடத்­திய சந்­தேக நபர்கள் 7 பேரில் உள்­ள­டங்கும் ஐவ­ரையும், தாக்­கு­த­லுக்கு  உதவி ஒத்­தாசை வழங்­கிய ஒரு­வ­ரையும் 12 மணி நேரத்­துக்குள் பொலிஸார் கைது செய்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இந்தச் சம்­ப­வத்தில் மற்­றொரு பாதாள உலகக் குழுவை வழிநடத்­திய இந்­துனில் வஜிர குமா­ர­வையே இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் படுகாய­ம­டைந்து கொழும்பு வைத்­தியசாலை­யிலும், காய­ம­டைந்த அப்­பாவி இளை­ஞ­ரான  27 வய­தான பால­சுப்­ர­ம­ணியம் ஜீவன் அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சை பெறு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

ஹங்­வெல்லை பொலிஸ் நிலை­யத்தில் நேற்று விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றை அவர் நடத்­திய நிலையில் அவர்  இது குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார். 

அதன்­படி குறித்த சம்­பவம்  சுருக்­க­மாக வரு­மாறு:

'ஹங்­வெல்ல - எம்­புல்­கம சந்­திக்கு இருவர் நேற்றுக் காரில் வந்­துள்­ளனர். அவர்கள் காரி­லி­ருந்து இறங்கும் போது, சிறிய ரக வேன் ஒன்­றிலும் இரு மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் வந்த குழு­வொன்­றினால் துப்­பாக்கிச்  சூடும் வாள் வெட்டும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது,  23 வய­தான  சுரேஷ் ருவந்த குண­சிங்க எனும் இளைஞர் படு காய­ம­டைந்த நிலையில் நவ­க­முவ வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு  செல்­லப்­படும் போது உயி­ரி­ழந்த நிலையில் இருந்­துள்ளார்.

காரைச் செலுத்தி வந்த பாதாள உலகக் குழு தலைவன், 26 வய­தான இந்­துனில் வஜிர குமார படுகாய­ம­டைந்து ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். பல கொலை குற்­றச்­சாட்­டுகள் உள்ள இவர் கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்­ன­ரேயே பிணையில் வெளியே வந்­துள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே சம்­பவம் இடம்­பெற்ற சந்­தியில் வடை விற்கும் அப்­பாவி இளைஞர் ஒரு­வரும் சம்­ப­வத்தில் காய­ம­டைந்து அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

நேற்று முன்தினம் இரவு 8.30 இற்கு இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் நுகே­கொடை சட்ட அமு­லாக்கல் பிரிவு மற்றும்  மேல் மாகாண தெற்கு குற்­றத்

­த­டுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றின் உத­வி­யுடன் ஹங்­வெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன்­போது, நவ­க­முவ பொலி­ஸா­ருக்கு சந்­தேக நபர்கள் பய­ணித்த வேனின் இலக்கம் தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. அது ஹங்­வெல்லை பொலி­சா­ருக்கு பரி­மாற்­றப்­பட்டு வேனின் உண்மை உரி­மை­யாளர் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளார். கொலன்ன பகு­தியைச் சேர்ந்த பெண் ஒரு­வரே அவ்­வேனின் உரி­மை­யாளர் என்ற நிலையில் கொலன்ன பொலிஸார் அப்­பெண்ணின் முக­வ­ரியில் சென்று விசா­ரித்­துள்­ளனர். இதன்­போது, அப்பெண் வீட்டில் இருக்­காத நிலையில் அவ­ரது கணவர் பதி­ல­ளித்­துள்ளார். இற்­றைக்கு ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்னர் அந்த வேனை 40 ஆயிரம் ரூபா மாத வாடகை அடிப்­ப­டையில் பிய­கம  பகு­தியில் வாகன வாடகை நிறு­வனம் ஒன்­றுக்கு கைய­ளித்­த­தாக அவர் கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து பிய­கம பொலி­ஸா­ருடன் ஹங்­வெல்லை பொலிஸார் பிய­க­மவில் உள்ள குறித்த வாகன வாடகை நிறு­வ­னத்­துக்குச் சென்று விசா­ரித்­துள்­ளனர். குறித்த வேன் நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் ரூபா முற்­பணம் செலுத்­தப்­பட்டு 3000 ரூபா நாள் வாடகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­டுள்­ளது. வேனைப் பெற்­றவர், சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் சகோ­த­ரனின் அடை­யாள  அட்­டையை சமர்ப்­பித்தே வேனைப் பெற்­றுள்ளார். இந்தத் தக­வல்­க­ளுக்கு மேல­தி­க­மாக, அந்த வேனில் ஜீ.பி.எஸ். தொழில் நுட்பம் இணைக்­கப்­பட்­டுள்­ள­தையும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

 இத­னை­ய­டுத்து விசா­ர­ணைகள் ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பம் ஊடே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி, குறித்த வேன்,  தலங்­கம பொலிஸ் பிரிவில் குமா­ரகே வத்த பகு­தியில் கட்­டப்­பட்டு வரும் இரு மாடி வீடொன்­றுக்கு முன்­பாக இருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர். அங்கு சென்ற பொலிஸார், அந்த வீட்டில் பிர­தான மேஸ்­தி­ரிக்கு கையு­த­வி­யா­ளர்­க­ளாக இருந்த இரு­வரைக் கைது செய்து விசா­ரித்த போது, அதில் ஒருவர் கொலை­யுடன் நேர­டி­யா­கவும் மற்­றை­யவர் அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­துள்­ள­மையும் தெரி­ய ­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அவ்­வேனை மீட்ட பொலிஸார், அங்கு உதவி ஒத்­தாசை புரிந்த நப­ரிடம் இருந்து தப்பிச் செல்ல பயன்­ப­டுத்­திய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்­கி­ளொன்­றையும் மீட்­டனர்.

ஜல்­தர, ரணால பகு­தியைச் சேர்ந்த  சமில நிஷாந்த, ரணில் அல்­மேதா ஆகிய சந்­தேக நபர்­களே கைது செய்­யப்பட்­ட­வர்­க­ளாவர்.

இத­னி­டையே, பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில்,  கடு­வலை நகர சபைக்கு அருகிலுள்ள பெரேரா குறுக்கு வீதிப் பகு­தியிலுள்ள  பாழ­டைந்த இடத்தில் இருந்து இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய  மேலும் இருவர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.  இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்த ஜல்­தர, ரணால பகு­தியைச் சேர்ந்த  கயான் மது­சங்க அத்­த நா­யக்க,  என்­ப­வரும்  நயண குமார முண­சிங்க என்­ப­வ­ருமே  இவ்­வாறு கைது செய்­யப்பட்­ட­வர்­க­ளாவர். இதில் கயா­னி­ட­மி­ருந்து 9 மில்லி மீற்றர் ரக தோட்­டாக்கள் பயன்­ப­டுத்தத்தக்க உள்நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. மூன்று தோட்­டாக்­களும் ஒரு வெற்றுத் தோட்­டாவும் இதன்­போது கிடைத்­துள்­ளன.

மற்­றை­ய­வ­ரி­ட­மி­ருந்து கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட  கூரிய ஆயு­தங்கள் சில மீட்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து அதி­ரடிப் படை­யினர் அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் கொலை­யுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட மேலும் இருவர் தொடர்பில் தகவல் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 18 வயதுடைய  சானுக சாலிந்த சில்வா,  தொன் நதுன் சானக ரத்நாயக்க ஆகிய குறித்த இருவரையும் அதிரடிப் படையினர் தொம்பே,  பலௌகம பகுதியில் வைத்து நேற்று நண்பகல் கைது  செய்தனர்.

அதன்படி இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர்கள் 5 பேரும் உதவி  ஒத்தாசை வழங்கிய ஒருவருமாக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையுடன் நேரடியாக 7 பேர் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில்  பொலிஸ் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  நேரடியாக தொடர்புபட்ட  மேலும் இருவரையும் உதவி ஒத்தாசை புரிந்த ஏனையோரையும் கைது செய்ய  விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21