தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேரடி காலநிலை அறிவிப்பின்போது பெண் ஊடகவியலாளர் ஒருவர் தனக்கு விமான நிலையத்திற்கு செல்வதற்கு தாமதமாவதை உணர்ந்து அறிவிப்பு கடதாசிகளை எறிந்துவிட்டு வேகமாக விரைந்து சென்று ஏனைய சக உத்தியோகத்தர்களையும் பார்வையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிட்னி நகரை அடிப்படையாகக் கொண்ட த சனல் நைன் தொலைக்காட்சி சேவையின் டுடே நிகழ்ச்சியின் அறிவிப்பாளரான லாரா வில்லா (37 வயது) காலநிலை அறிவிப்பு நிகழ்ச்சியின் இடைநடுவில் தனக்கு விமானத்திற்கு தாமதமாவதை உணர்ந்து பதற்றமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தான் செல்வதாகக் கூறியவாறு தொலைக்காட்சி அறிவிப்பு கடதாசிகளை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் சக பெண் அறிவிப்பாளர் அவரது காலநிலை அறிவிப்பைத் தொடர நேர்ந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM