பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் காலில் விழுவதுபோல், பேஸ்புக்கில் தவறாக சித்தரித்த வாலிபரை பொலிஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார்.
குறித்த காட்சி கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து பொலிஸில் புகார் செய்தனர். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர். அவரிடம் இருந்து கையடக்கதொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோன்ற காட்சியை அவராக சித்தரித்தாரா? அல்லது வேறு யாரும் உருவாக்கி கொடுத்தார்களா என்று விசாரணை நடத்தினார்கள். பிரதமர் மோடியை தவறாக சித்தரித்ததற்கு பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM