இலங்கைக்கு மேல் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இந்தியா நோக்கி நகர்வு

Published By: Priyatharshan

17 May, 2016 | 11:21 AM
image

இலங்கைக்கு மேல் வளிமண்டலத்தில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இந்தியா நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நேற்று பெய்த மழைவீழ்ச்சியினளவுடன் ஒப்பிடுகையில் இன்று குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதும் பெய்த அடைமழையினால் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பதுடன், 31,062 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,428 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பெய்த அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 7 மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

 இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வௌ்ளம், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல், திடீர் வௌ்ளம், மின்னல் தாக்கம், அதிக மழையுடன் வீசிய கடும் காற்று ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. 

இயற்கை அனர்த்தம் காரணமாக 1858 குடும்பங்களைச் சேர்ந்த 5,196 பேர் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 32 தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 11 மாவட்டங்களிலும் இடி, மின்னல் தாக்கம், மண்சரிவு, வௌ்ளத்தினால் 8 பேர் உயிரிழந்ததோடு 3 பேர் காணாமல் போயிருப்பதாகவும் இருவர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50