வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்ட சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் கைது

Published By: Digital Desk 4

16 Sep, 2019 | 10:28 AM
image

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்தக் கொள்ளைச் சம்வம் இணுவில் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத் தலைவர் கதவை திறந்துள்ளார் அப்போது முகத்தை முழுமையாக மூடியவாறு கூரிய ஆயுதங்களுடன் நின்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்பத் தலைவரை கடுமையாக தாக்கியதுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். 

அங்கிருந்த அவரது மனைவியையும் பிள்ளைகளையும் தாக்கியதுடன் வீட்டியிலிருந்த மடிக்கணினி கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையடித்தனர் மேலும் வீட்டிலிருந்த பெண்மணி அணிந்திருந்த தோட்டினையும் அபகரித்துள்ளனர்.

இதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இந்தச் சம்வம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வீட்டில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மடிக்கணினியையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் இராணுத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37