பயணிகள் விமானம் ஒன்றில் விமானத்தை இயக்கும் பகுதியில் 'கோப்பி' சிந்தியதால், 337 பேருடன் பயணித்த விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டதாக பிரிட்டன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து மெக்ஸிகோவின் கான்குன் நகருக்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த விமானமானது அத்திலாந்திக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது மேல் மூடி இல்லாத குவளை ஒன்றில் தலைமை விமானிக்கு கோப்பி பரிமாறப்பட்டுள்ளது. பின்னர் அது அவருக்கு தெரியாமல் தட்டுப்பட்டதனால் குவளையில் இருந்த கோப்பி விமானியின் மடியில் சிந்தியதுடன் சிறிதளவு கோப்பி விமானத்தின் கட்டுப்பாட்டு பகுதியிலும் சிந்தியுள்ளது.
கோப்பியின் சூட்டால் விமானியின் ஒலி கட்டுப்பாட்டுப் பகுதி உருகத் தொடங்கியதால் அப் பகுதியில் புகை உண்டாகியுள்ளது. இதனால் தரைக்கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொள்வதில் விமானிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் அயர்லாந்தில் உள்ள ஷெனான் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் இந்த விபத்து நடந்தது என்பது தொடர்பில் பிரிட்டன் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றாலும் அது கான்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் என்று 'விமான பாதுகாப்பு மன்றம்' எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM