ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­கா­ரங்கள்  இன்று முதல் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம்

Published By: Vishnu

15 Sep, 2019 | 09:48 AM
image

(ஆர்.ராம்)

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்து அதனை  நடத்­து­வ­தற்­கான  பூரண செயற்­பாட்டு அதி­காரம் சர்­வ­தேச  ஜன­நா­யக தின­மான இன்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைத்­துள்­ளது. 

1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் 1981ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க திருத்­தப்­பட்ட தேர்­தல்கள் சட்­டத்தின் பிர­கா­ரமே ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைத்­துள்­ளன.   

இந்த அதி­கா­ரங்­களின் பிர­காரம்  வேட்பு மனுக்­க­ளுக்­கான கோரிக்கை, ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான திகதி, கட்­டுப்­ப­ணங்களை பெற்றுக் கொள்­ளு­வ­தற்­கான அறி­விப்­புக்­களை முன்­னெ­டுக்க முடியும்.

அத்­துடன் தேர்­த­லுக்­கான அறி­விப்பு விடுக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து,  தேர்தல் பிர­சா­ரங்­களில் அரச சொத்­துக்கள் பயன்­ப­டுத்தல், அரச நிறு­வ­னங்­களை பயன்­ப­டுத்தல், வேட்­பா­ளர்­களின் பரப்­பு­ரைகள் மற்றும் பிர­சார நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணித்தல், தேர்தல் சட்ட விதி­மு­றை­களை மீறும் செயற்­பா­டு­களை தடுத்து நிறுத்தல்  ஆகிய விட­யங்­க­ளிலும் தீர்­மா­னங்­களை எடுத்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அதி­கா­ரமும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைத்­துள்­ளது.

இதே­வேளை, எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்ள அர­சியல் கட்­சிகள், கூட்­ட­ணி­களின் செய­லா­ளர்கள் மற்றும் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­ட­னான விசேட சந்­திப்­பொன்றில் தேர்­தல்கள் ஆணைக்­குழு ஈடு­ப­ட­வுள்­ளது. 

ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் மஹிந்த தேசப்­பி­ரிய மற்றும் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான பேரா­சி­ரியர் ரட்­ண­ஜீவன் ஹூல், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் அபே­சே­கர ஆகி­யோரின் தலை­மையில் இந்தச்  ச ந்திப்பு இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள தேர்­தல்கள் ஆணை­ய­கத்தில் முற்­பகல் 10.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது, ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சட்­டங்கள், தேர்தல் ஒழுக்க நெறிகள் சம்­பந்­த­மாக கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தல்கள் நடை­பெ­ற­வுள்­ளன. அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களின் கூட்­டான  பரிந்­து­ரைக்­க­மை­வாக  தேர்தல் ஒழுக்­க­நெ­றிகள் தொடர்­பான  வழி­காட்­டியில்  மாற்­றங்கள்  ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது  வழ­மை­யாக  இருந்து வரு­கின்ற போதும்  இம் முறை ஆணைக்­கு­ழு­வா­னது ஒழுக்­க­நெ­றி­யி­லுள்ள  விட­யங்­களில் எவ்­வி­த­மான  மாற்­றங்­க­ளையும்  மேற்­கொள்­வ­தற்கு  இட­ம­ளிக்­காது  இறுக்­க­மாக  செயற்­பட எதிர்­பார்த்­துள்­ள­தாக  அறி­ய­மு­டி­கி­றது. 

இத­னை­ய­டுத்து மாவட்ட செய­லா­ளர்கள், உதவி தேர்­தல்கள் ஆணை­யா­ளர்கள் மற்றும் பிரதி தேர்­தல்கள் ஆணை­யா­ளர்கள் அனை­வ­ருக்கும் தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்ள அமைப்­புக்­க­ளுக்கும் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொள்­வ­தற்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தமது வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக இது­வ­ரையில் 14அர­சியல் கட்­சிகள் அறி­விப்­பினை விடுத்­துள்­ளன. அத்­துடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்­ள­தாக 17வேட்­பா­ளர்­களின் பெயர்கள் இது­வ­ரையில் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் சட்­டப்­ப­ணிப்­பாளர் நிஹால் புஞ்சி நிலமே தெரி­வித்­துள்ளார். 

அதே­நேரம், இந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது 2018ஆம் ஆண்டு வாக்­காளர் பெயர் பட்­டியல் கருத்­திற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் அதனால் கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 2 இலட்சம் பேர் மேலதிகமாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அன்றையதினம் முதல் 63 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமென்றும் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58