வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் நேற்று வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் மற்றும் கடைகள் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் மக்கள் அவலநிலையுடன் வாழ்ந்திருந்தார்கள்.
நேற்று மாலை நெடுங்கேணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது. அத்துடன் வீதியோர மரங்களும் சரிந்து விழ்ந்திருந்ததால் போக்குவரத்தும் சற்று நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
இப் பகுதியில் கடுமையான மழை பெய்திருந்ததாகவும் , இடி வீழ்ந்து மரங்கள் முறிந்திருந்ததாகவும், வீடுகள் பகுதியளவு சேதமைந்துள்ளதுடன் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொருட்கள் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM