இலங்கையின் அரசியலமைப்பு ரீதியாக தன்னாட்சியை பெற்றுக் கொள்வதற்கான நாடகம் மோடி, மைத்திரி, சம்பந்தன் ஆகிய மூம்மூர்த்திகள் மூலம் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுவருகின்றது. இந் நிலையில் அந்த நாடகம் , இன்று இலங்கையில் சம்பந்தனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
27000 பாடையினர் உயிர்களை அர்ப்பணிப்பு செய்து மீட்ட நாட்டை காட்டிக் கொடுக்க அரசு முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிட்டகோட்டேயிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.
இதற்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். அத்தோடு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இவ் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முயற்சிக்கும் வடகிழக்கு ஒற்றையாட்சியை பெற்றுக் கொள்ளும் விடயமே முன்னெடுக்கப்படுகிறது.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தன்னாட்சியை வழங்க இணங்கியுள்ளனர். இது சம்பந்தனுக்கு கிடைத்த வெற்றியாகும். புதிய அரசியலமைப்பில் தன்னாட்சி உள்வாங்கப்படவுள்ளது.
தன்னாட்சியை இலங்கையின் அரசியலமைப்பு ரீதியாக பெற்றுக் கொள்ளும் சம்பந்தன் அதன் பின்னர் ஐ.நா.வின் ஆதரவுடன் தனித் தமிழீழத்திற்கான தனது நிகழ்வுகளை முன்னெடுப்பார். அரசியலமைப்பினூடாக தன்னாட்சி வழங்கப்படும்போது ஐ. நா. அதனை பயன்படுத்தி தமிழீழத்துக்கான அங்கீகாரத்தை வழங்கும் . அதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது.
27000 படையினர் தங்களது உயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து பிரிவினையை தடுத்தனர். ஆனால் இன்று மைத்திரி, ரணில் அரசாங்கம் படையினரை காட்டிக் கொடுத்து புலிப் பயங்கரவாதிகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றது.
ஆயுதங்களுடன் தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் இன்று அரசியலமைப்பு ரீதியாக ஐ.நா.வின் உதவியுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சி சம்பந்தனினால் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் விக்கினேஸ்வரன் அதற்காக அடிப்படை நடவடிக்கைகளையும் படிப்படியாக முன்னெடுக்கின்றார். மோடி மறுபுறம் தனது நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
இவ்வாறு நாட்டை காட்டிக் கொடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றன.. இதனை நாம் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்பதாக சொன்னோம். ஆனால் யாரும்
கேட்கவில்லை. இன்று நாம் சொன்னது
அனைத்தும் உண்மையாகிக் கொண்டிருக் கின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM