அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர் பில் குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளராகவுள்ள டொனால்ட் டிரம்ப், தான் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்லர் எனவும் தீவிரவாதத்துக்கே எதிரானவர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.ரி.வி. ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்கள் உள் முகமாகத் திரும்பி பொலிஸாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிக்கத் தடை விதிக்க அழைப்பு விடுத்தமைக்காக தன்னைப் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் முட்டாள் எனவும் தவறானவர் எனவும் அழைத்துள்ளமை தொடர்பான குறிப்பை வாசித்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் முன்னணி வேட்பாளராக இல்லாத நிலையில் டேவிட் கமெரோன் அந்த விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிப்பதற்கு உடனடி தற்காலிகத் தடையை விதிக்கக் கோரி தான் அழைப்பு விடுத்தமைக்கு அரசியல்வாதிகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
"ஆனால் உலகிலுள்ள மில்லியன்கணக்கான மக்கள் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பு சரி எனத் தெரிவித்துள்ளனர்" என அவர் வலியுறுத்தினார்.
உலகின் மாபெரும் பிரச்சினையாக அடிப்படைவாத மதத் தீவிரவாதம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், “நீங்கள் உலகமெங்கிலும் நோக்கினால் எங்கும் குண்டு வெடிப்புகள் இடம்பெறுகின்றன. அந்த சேதங்கள் சுவீடனிலிருந்து வந்தவர்களால் ஏற்படவில்லை. நான் கூறுவது சரிதானே?” என அவர் வினவினார்.
"அதனால் முஸ்லிம்கள் பொலிஸாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மாறாக அவர்கள் பொலிஸாரை தம்மை நோக்கித் திரும்ப வைக்கக் கூடாது. அவர்கள் பந்தை விளையாடாவிட்டால் அது நகரப் போவதில்லை" என டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
டேவிட் கமெரோனின் விமர்சனம் குறித்து அவர் தெரிவிக்கையில், தான் பிரித்தானியப் பிரதமருடன் நல்லுறவை நாடப்போவதில்லை என்று கூறினார்.
அதேசமயம் தன்னை அலட்சியப் போக்குடையவர் எனக் குறிப்பிட்ட லண்டன் மேயர் சாதிக் கானையும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வேட்பாளராக நியமனம் பெற்ற அரசியல் அனுபவம் குறைந்த ஒருவராக டொனால்ட் டிரம்ப் விளங்குகிறார். அவர் ஒருபோதும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பதவியை வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பலர் அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட் டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்வ தற்கான உட்கட்சி வாக்கெடுப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை ஒரேகன் பிராந்தியத் தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM