இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் உள்விவகாரம் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஏஎல்ஏ அசீஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சவேந்திரசில்வாவின் நியமனம் குறித்து சில நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திரசில்வாவை நியமிப்பது என்பது இலங்கையின் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகள் தொடர்பான உள்ளக நிர்வாக நடைமுறைகள் மீது வெளிச்சக்திகள் செல்வாக்கு செலுத்த முயல்வது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்தூதுவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இந்த நியமனம் தொடர்பில் இலங்கையின் சில இருதரப்பு சகாக்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனைகளை வெளியிட்டுவருவது கவலையளி இயற்கை நீதி தொடர்பான கொள்கைகளிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM