மக்களாணையினை மதிக்கும் தலைமைத்துவத்தை  ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் - ஆசு மாரசிங்க 

Published By: R. Kalaichelvan

11 Sep, 2019 | 07:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இரண்டு பிரதான விடயங்களும் நிச்சயம் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கத்தில் நிறைவேற்றப்படும். மக்களாணையினை மதிக்கும் தலைமைத்துவத்தை ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாரிய போராட்டத்தின் மத்தியிலே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த நான்கு வருட காலமாக  பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு பாரிய சேவைகளை வழங்கியுள்ளது. 

அரசியல் சூழ்ச்சிகள் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகனை வழங்கியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு  ஆகிய  இவ்விரு விடயங்களும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளினால் பிரதானமாக காணப்பட்டது.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் குறுகிய காலத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு  ஆகியவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெறாததினாலும்,  ஆட்சி பீடம் ஏற வழங்கிய  வாக்குறுதிகளை ஒரு தரப்பினர் மறந்தமையினாலும் இவ்வாக்குறுதிகளை அரசாங்காத்தினால் நிறைவேற்ற முடியவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எந்தளவிற்கு  பாரதூரமானது என்பதை நாட்டு மக்களுக்கு புதிதாக தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50