பாகிஸ்தானில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை விட பால் ஒரு லீற்றரின் விலை ரூபா 140 ஆக அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பெற்றோல் விலையை விட பால் விலை அதிகரித்துள்ளது. மொகரம் நாளை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி, சிந்து மாகாணங்களில் பல இடங்களில் பால், ஜூஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுக்க ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாலின் தேவை அங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரு லீற்றர் பாலின் விலை ரூபா 120 முதல் ரூபா 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேவேளை, ஒரு லீற்றர் பெற்றோல் விலை ரூபா 113 க்கும் ஒரு லீற்றர் டீசலின் விலை ரூபா 91 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் அரசாங்கம் நிர்ணயித்த ஒரு லீற்றர் பாலின் விலை ரூபா 94 மட்டும்தான். ஆனால் பால் தட்டுப்பாட்டால் தற்போது மிக கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM