இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்ரிக் பொருட்களுக்கு எதிராக இன்று பிரச்சாரமொன்றை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள மதுராவிற்கு சென்ற இந்திப் பிரதமர் மோடியை, உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்குள் நமது வீடுகள், அலுவலகங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.
இந்த பணியில் சேர சுய உதவிக்குழுக்கள், சிவில் சமூகம், தனிநபர்கள் மற்றும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது. உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மதுரா எம்.பி. ஹேமமாலினி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன், கால்நடைகள் கால் மற்றும் வாய் நோய் மற்றும் புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தையும் இந்தியப் பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்தார். விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அத்துடன் கால்நடை, சுற்றுலா மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானம் தொடர்பான உத்தரபிரதேச அரசின் 16 திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM