சீரற்ற காலநிலை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.!

Published By: Robert

16 May, 2016 | 03:42 PM
image

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு சீரற்ற கால நிலை தொடர்பில் விழிப்பில் இருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உட்பட முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நிதியை ஒதுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி திடீர் இடர்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துமாறும், அது தொடர்பில் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி நாடு முழுவதும் முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதேவேளை, சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோனுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11