"தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட அடுத்த ஐந்து வருடத்துக்கும் மக்கள் ஆணைதர வேண்டும்"

Published By: Vishnu

10 Sep, 2019 | 05:00 PM
image

(நா.தினுஷா) 

நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து  வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான  தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் விக்கிரமசிங்க  தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வரலாற்றில் எமது தலைவர்கள் சகலரும் இன , மத வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டனர். அதனூடாக  அவர்களின்  இலக்குகளை வெற்றிகொண்டார்கள். இதேவேளை நாம் முப்பது வருட யுத்தத்தை காலத்தை சந்தித்துள்ளோம். அதன்  தொடர்ச்சியாக  நாட்டை அபிவிருத்தி  செய்யும் பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றன. பாதைகளை நிர்மாணம் , கட்டிட நிர்மாணம் போன்ற பௌதீக அபிவிருத்திகள் கண்ணுக்கு புலப்படக் கூடியவை. அவ்வாறான அபிவிருத்தி பணிகள்  பிரமாண்டமாக  பார்க்கப்படக் கூடியவை.

இவற்றுக்கு அப்பால்  நாட்டின் அடையாளத்தை பாதுகாப்பதிலேயே எங்களின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து  வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும.; 

2015 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம்.  அது தொடர்பில் பல்வேறு  விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

ஆகவே அந்த விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நாமே உருவாக்கினோம். அதேபோன்று  தற்போது அந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36