தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

Published By: Daya

10 Sep, 2019 | 01:01 PM
image

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப் பட்டது. 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருவதுடன், இதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடத்துதல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஏ.டி.சிறிசேன முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். 

நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பியசிறி விஜயநாத் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11